×

பிரதமருக்கு பள்ளி மாணவர்கள் கடிதம்

தொண்டி, செப். 21: தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் நேற்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். அதில் மகாத்மா காந்தியின் உன்னத திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை நான் வரவேற்கிறேன். இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற என்னால் இயன்ற முயற்சி செய்வேன், தூய்மையை முதலில் என்னில் இருந்து தொடங்கி சக மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இத்திட்டத்தை வெற்றி பெற செய்வேன் என உள்ளது. தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமையில் அனைத்து மாணவர்களும் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை