×

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் நாள் கூட்டம்

ராமநாதபுரம், செப். 21:  ராமநாதபுரம் மாவட்டம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைகள், கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை