×

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

சாயல்குடி, செப். 21: முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமை வகித்தார். முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி வரவேற்றார். முகாமில் 53 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் நலதிட்ட உதவிகளும், தையல் மற்றும் விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமணைபட்டா, பட்டா மாறுதல், திருமணம் உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம், மகளிர் சுயஉதவிகுழுகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 109 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு நன்றி கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை