நிகழ்ச்சியின் முடிவில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் சில்வர் பாத்திரம் மாநகராட்சி அசத்தல்

மதுரை, செப்.21: விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முடிவில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சில்வர் பாத்திரங்களை வழங்கி மதுரை மாநகராட்சி அசத்தியது. மதுரை மாநகராட்சி, இந்திய அரசின் கள விளம்பரத் துறை இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சிறப்பு விழிப்புணர்வு முகாம் அனுப்பானடியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்கள் தேநீர் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்கக் கோரி, சில்வர் பாத்திரங்களை வழங்கி கமிஷனர் அசத்தினார். கல்லூரி மாணவர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கள விளம்பரம் உதவி அலுவலர் வேல்முருகன், நகர்நல அலுவலர் சதிஷ் ராகவன், உதவி கமிஷனர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: