காரில் இருந்த ரூ.6 லட்சம் மாயம்

மதுரை, செப். 21: மதுரை இஸ்மாயில்புரம் 14வது தெருவைச் சேர்ந்தவர் மோகன். மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தென்காசியிலிருந்து மதுரைக்கு காரில் வந்தார். உடன் கடை ஊழியர் சரவணன் வந்தார். காரில் ரூ.6 லட்சம் ரொக்கம், ஆறரை கிலோ வெள்ளிக்கட்டிகளுடன் 2 பைகள் இருந்தன. மதுரைக்கு வந்த பிறகு காரிலிருந்த பைகளை எடுக்க முயன்றபோது ரூ.6 லட்சம் கொண்ட பை மட்டும் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: