தொழில் நஷ்டத்தால் டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமங்கலம், செப்.21: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த டிராவல்ஸ் அதிபர் திருமங்கலம் அருகே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ஜெயந்த்(35). டிராவல்ஸ் அதிபர். கடந்த சில ஆண்டுகளாக இவரது தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. தனது கார்களை விற்று சமாளித்து வந்தார். இருப்பினும் நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஊரிலிருந்து கிளம்பி மாயமானார். இந்நிலையில் திருமங்கலத்தை அடுத்துள்ள சொக்கநாதன்பட்டி அருகே ரிங்ரோடு பகுதியில் இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயந்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: