திருமங்கலம், செப்.21: திருமங்கலம் ஒன்றியத்தில் 27 பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாணவர்களை பாதுகாப்பான இடங்களில் அமரவைத்து பாடம் நடத்த அறிவுறுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமங்கலம் அடுத்துள்ள கரடிக்கல்லில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வாரண்டாவில் உள்ள சிமெண்ட் பூச்சு சமீபத்தில் இடிந்து விழுந்தது. யாருக்கும் காயங்கள் இல்லை. இது குறித்து வந்த தகவல்களை அடுத்து திருமங்கலம் பிடிஓக்கள் தர்மராஜா, உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கரடிக்கல் பள்ளியில் ஆய்வு நடத்தினர்.