நத்தம் கைலாசநாதர் கோயிலில் மழை பெய்ய வேண்டி யாகம்

நத்தம், செப். 21: நத்தம் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் மகாருத்ர ஹோமயாகம் நடந்தது. இதற்காக சன்னதி முன்பு கலசங்கள் வைக்கப்பட்டு 2 நாட்கள் பூஜைகள் நடந்தன. கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் குருக்கள் செய்திருந்தனர்.

Related Stories: