×

காதலியின் உறவினர்கள் தாக்கியதால் மனமுடைந்து காதலன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி கொடைக்கானலில் பரபரப்பு


கொடைக்கானல், செப். 21: கொடைக்கானலில் காதலியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் மனமுடைந்த காதலன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வினோத் (19). இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவியும் காதலித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் கொடைக்கானல் பள்ளங்கி அலத்துறை பகுதியில் உள்ள வினோத்தின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நேற்று முன்தினம் அங்கு சென்று வினோத்தை சரமாரியாக தாக்கினர்.

இதனால் மனமுடைந்த வினோத் திடீரென வீட்டிலிருந்த அரிவாள்மனையால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி