×

திமுக சார்பில் குடும்ப நிதி

திண்டுக்கல், செப். 21: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு மற்றும் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தவர்களுக்கு கட்சி சார்பில் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.அதன்படி நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி முத்துலாபுரத்தை சேர்ந்த திமுக தொண்டர் பாண்டி, வத்தலக்குண்டு அருகே விருவீடு தருமத்துபட்டியை சேர்ந்த தொண்டர் பொன்னாங்கத்தேவர், ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை குமாரசாமிகவுண்டன்புதூரை சேர்ந்த தொண்டர் சரவணன், வேடசந்தூர் அருகே வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த தொண்டர் தங்கவேல் (39), உசிலம்பட்டி குடப்பத்தை சேர்ந்த சௌபாக்கியம் (50), வடமதுரை 11வது வார்டு தொண்டர் ராஜலிங்கம், பட்டிவீரன்பட்டி நெல்லூரை சேர்ந்த தொண்டனர் ஜெயராஜ் (51), செந்துறை பெரியூர்பட்டியை சேர்ந்த உறுப்பினர் பெரியய்யா, திண்டுக்கல் குருநகரை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகிய 8 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டது.காசோலைகளை திமுக மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி , மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களுமான அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். உடன் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...