பள்ளி ஆசிரியர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை சிஇஓவிடம் மனு

திண்டுக்கல், செப். 21: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையேகோட்டையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘‘எனது மகன் இடையகோட்டை, நேருஜி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தான். சில மாதங்களுக்கு முன்பு எனது மகனை பள்ளியில் வைத்து இளங்கோவன் என்ற ஆசிரியர் கட்டாயப்படுத்தி மசாஜ் செய்ய வைத்துள்ளார். இது பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியானதால் எனது மகன் மன உளைச்சலுக்கு ஆளானான். இதுதொடர்பாக அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் மனு கொடுத்தேன். அவர் விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை இடமாற்றம் செய்தார்.

இந்நிலையில் இளங்கோவன் ஆட்களை வைத்து, இனிமேல் உன் தந்தை எனது விஷயத்தில் தலையிட்டால் நடப்பதே வேறு என்று எனது மகனை மிரட்டியுள்ளார். இதனால் எனது மகன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறான். எனவே ஆசிரியர் இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவருக்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: