கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

புதுவண்ணாரப்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (30). அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது, அந்த பகுதியில் புது வீடு வாங்கி வசித்து வருகிறார். மணிகண்டன், நேற்று காலை அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே ஆட்டோவில் வந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 4 பேர், திடீரென மணிகண்டனின் கை, கழுத்து, கால்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. அவர், அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். உடனடியாக அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: