மைனர் பெண் பலாத்காரம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: தரமணியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர், அதேபகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, தரமணி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில், உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சதீஷ்குமார் மைனர் பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சதீஷ்குமாருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: