×

ஹூக்கா பார் : 3 பேர் கைது

சென்னை: அண்ணாநகர் பகுதியில் ரகசியமாக ஹூக்கா பார் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் தடை செய்யப்பட்ட ஹூக்கா பார் நடத்தி வந்த  வடபழனி ராஜாங்கம் சென்ட்ரல் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (31) மற்றும் அவரது நண்பர்களான கக்கன்ஜி நகரை சேர்ந்த ஷ்யாம் குமார் (27), வடபழனி மன்னர் முதலி தெருவை சேர்ந்த ராஜேஷ் (22) ஆகியோரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மண் பானை குடுவை, 12 பைக் மற்றும் 10 போதை பாக்கெட்டுகள் பறிமுதல் ெசய்யப்பட்டன.

 திருவொற்றியூர் கேவிகே குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி டிரைவரிடம், ₹800 பறித்த திருவொற்றியூர் காந்தி நகரை சேர்ந்த தீபக் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக், கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

 அரும்பாக்கம் மேற்கு கல்லூரி சாலை, ஜெகநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்ற கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த தமிம் அன்சாரி (25), அரும்பாக்கம் ஜெய் நகரை ேசர்ந்த சரவணன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 தாம்பரம் அடுத்த சேலையூர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மனைவி மாரியம்மாள். நேற்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த சிலர் ராமநாதன் எங்கே என கேட்டு மரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். புகாரின்பேரில், சேலையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (26), அஜித் (21), அக்தர் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  கண்ணகி நகரை சேர்ந்த அசோகன் (27) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு 3 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (34) என்பவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையிலடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கடந்த ஓராண்டாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  காஞ்சிபுரம் அருகே கூத்திரம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (23). இவரது நண்பர், காஞ்சிபுரம் தாயார்குளம் கலைஞர் நகரை சேர்ந்தவர் சுதாகர் (22). இருவரும் நேற்று காலை பைக்கில் ஒரகடம் அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரி மீது மோதியதி பரிதாபமாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

   துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற பிரபகரன் (24), சரவணன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...