×

சிறுமி பலாத்கார வழக்கு ரகசிய விசாரணை நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக்கோரிய மனு மீது நீதிபதி அறையில் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியை 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 பேரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டதாலும், மாநில போலீசார் அவசர அவசரமாக விசாரணை நடத்துவதாலும் நியாயமான விசாரணை நடக்காது எனக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, சிறுமி மீதான பாலியல் வழக்கு என்பதால் மிகவும் கவனமாக விசாரிக்க வேண்டிய வழக்காக உள்ளது. எனவே, இந்த வழக்கை ரகசிய விசாரணை நடத்துவதாக உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...