மூர்மார்க்கெட்டில் கடைகள் எரிந்து நாசம்

சென்னை: மூர்மார்க்கெட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து நாசமானது. சென்னை பெரியமேடு கண்ணப்பர் திடல் அருகே நியூ மூர்மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மர்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் பழைய மின் மோட்டர்கள் மற்றும் கார், லாரி உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் மூடப்பட்டிருந்த மின் மோட்டர்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மளமளவென தீ அருகில் இருந்த கடைகளிலும் பற்றியது.இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி வேப்பேரி, கீழ்ப்பாக்கம், உயர் நீதிமன்றத்தில் இருந்து தீயணைப்பு அலுவலகம் விஜயகுமார் தலைமையில் 10 பேர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 6 கடைகளில் இருந்து மின் மோட்டார் மற்றும் ஓயர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

Related Stories: