×

கல்லூரி மாணவி கொலை : வாலிபருக்கு ஆயுள்

சென்னை,:கடலூர் மாவட்டம், தொழுதூர் தாலுகா, வைத்தியராயபுரத்தை சேர்ந்தவர் மணி (22). இவர், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 வருடங்களாக வாடைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக சுற்றி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர்கள், மணியை கண்டித்துள்ளனர். இருந்தும் மணி சங்கீதாவை விடுவதாக இல்லை. இந்நிலையில் மணி, கடந்த 2012ம் ஆண்டு மாணவி வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தபோது, அவரை பின்தொடர்ந்து, எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று கூறி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுெதாடர்பாக, தேனாம்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மணி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது என்று கூறி ஆயுள் தண்டனையும், ₹25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...