ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சை, செப். 21: சென்னை  உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், போக்குவரத்துத்துறை ஆணையர், தஞ்சை கலெக்டர் அறிவுரையின்படி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த கதிரவன் கலைக்குழுவினரால் “சித்திரகுப்தனும் எமதர்ம ராஜாவும்” என்ற தலைப்பில் இருசக்கர வாகன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடந்தது. நிகழ்ச்சியில் பேருந்து நிலையங்களுக்கு வந்த பயணிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் வழங்கினார். மேலும் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தரராமன், கதிர்வேல் பங்கேற்றனர்.

Related Stories: