பாபநாசம், செப். 21: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட மழைநீர் வடிகால்களில் சுழற்சி முறையில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. இதேபோல் பாபநாசம் மாதா கோயில் அருகில் உள்ள கோபுராஜபுரம் வாய்க்காலில் மண்டியிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இந்த பணிகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு பார்வையிட்டனர்.