கும்பகோணம், செப். 21: அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கும்பகோணத்தில் வருகிற 24ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்கிறார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் குறித்து பேசப்படாத பல்வேறு கருத்துகளை கூறி திருக்கோயில் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.