×

புதுகை மகளிர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, செப். 21: புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பண்பாட்டு மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியை பெட்லராணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கலை, கட்டிடக்கலை, இசை, சிற்பம், கல் வெட்டு, வாழ்வியல் பண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.தொடர்ந்து ஆசிரியர்கள் நார்த்தாமலைக்கு களப்பயணம் சென்று குடவரை கோயில் குறித்து பார்த்து அறிந்தனர்.
பயிற்சியில் மாவட்ட கருத்தாளர் ரெங்கராஜூ. கருத்தாளர்கள் கோகிலாதேவி, ராசி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.


Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...