×

புதுகையில் இன்று கலைஞரின் புகழுக்கு வணக்கம் நிகழ்ச்சி

புதுக்கோட்டை, செப். 21: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமை கழக அறிவிப்பிற்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவரும், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக, 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இதுவரை தோல்வியையே சந்திக்காத ஒரு மகத்தான தலைவருக்கு ‘தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பின் கீழ் அரங்க கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் புதுக்கோட்டை மாலையீட்டில் அமைந்துள்ள கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில் பத்திரிக்கையாளர் அருணன், தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் கலந்து கொண்டு புகழ் வணக்க உரை நிகழ்த்துகின்றனர். இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தை சேரந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா