×

வர்த்தக கழகம் வலியுறுத்தல் அறந்தாங்கி பகுதியில்

அறந்தாங்கி, செப். 21: அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றதுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டுகோட்டை சாலை வாகை மரம் பகுதி அக்னி பஜார் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு பிரசாரம் செய்தனர்.இந்திய அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு இந்திய குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்து உரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுறவு சங்கம் அமைக்கும் உரிமை  ஆகியவற்றை உறுதி செய்கிறது.

அரசியல் சாசனத்தின் 29வது பிரிவு சிறுபான்மையினர் நலன் காத்தல், மொழி, பண்பாடு, எழுத்து ஆகியவற்றை பேணி காக்கும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் அவற்றை முற்றாக மறுக்கும் மத்திய பாஜக அரசு, தமிழக அதிமுக அரசு ஆகியவற்றின் ஜனநாயக விரோத போக்கை எதிர்த்து நடந்த இந்த தெருமுனை பிரசாரத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, நகர செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு