×

தோகைமலை அருகே பேரூர் உடையாபட்டியில் குடிநீர் குழாய்

தோகைமலை, செப்.21: தோகைமலை அருகே உள்ள பேரூர் உடையாபட்டிக்கு தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்ற குடிநீர் குழாயை திமுக எம்எல்ஏ ராமர் திறந்து வைத்தார்.கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், குளித்தலை பகுதிகளில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக தோகைமலை ஒன்றியம் கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டிக்கு தொகுதி மேம்பாட்டு திட்டம் 2017-2018ன் நிதியின் கீழ் ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து 7.5 எச்.பி மின் மோட்டார் பொருத்தி பைப்லைன் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி பேரூர் உடையாபட்டி பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ராமர் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். மேலும், கூடலூரில் செயல்படும் கால்நடை மருத்துவமனையை வாரத்தில் ஒருநாள் புதன்கிழமை அன்று பேரூர் உடையாபட்டியில் பால் சொசைட்டியில்  முழுநேரமாக செயல்படும் கால்நடை மருத்துவமனையை எம்எல்ஏ ராமர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணி, ஒன்றிய அவைத் தலைவர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்புதுறை மணிமாறன், பங்குதந்தை தேவராஜ், பால் சொசைட்டி தலைவர் சவரிராஜ், துணை தலைவர் பிரன்சிஸ் சேவியர், பொன்பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...