×

பாதாள சாக்கடை பணிகளால் பசுபதிபாளையம் சாலை படுமோசம்

 கரூர்,செப்.21: பாதாள சாக்கடை பணிக்காக கரூர் வடக்கு பசுபதிபாளையம் தெருச் சாலைகள் சிதிலமடைந்தது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட வடக்குபசுபதிபாளையம் பகுதியில் பல்வேறு தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதற்காக, தெருவின் பல்வேறு சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, அனைத்து வடிகால்களையும் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்றது.

பணி முடிவுற்றதும், தோண்டப்பட்ட பள்ளம் அவசர கதியில் மூடிவிட்டு சென்றதால் தெரு முழுவதும் சின்ன சின்ன திட்டுக்களாக காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடுமையாக பாதிப்பட்டு வருகின்றனர். நடந்து செல்லும் முதியவர்களும் தடுமாறி விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.எனவே, பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினை சீரான முறையில் சரி செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு