×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு மாவடியான் துவக்கப்பள்ளி தற்காலிக நுழைவு வாயிலில் கேட் அமைக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் 25ம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

கரூர், செப். 21: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25ம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 25ம்தேதி காலை 11மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு