×

இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

திருபுவனை, செப். 21: திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் வீட்டுவரி, குடிநீர், மின்கட்டண உயர்வை கண்டித்தும், எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய கோரியும், ஏரி, குளம், வாய்க்கால்களை புனரமைக்க வலியுறுத்தியும் திருபுவனை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கொம்யூன் அலுவலகம் முன்பு நடந்தது. தொகுதி செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். குப்புசாமி, பொன்.பிரகாஷ், பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநிலக்குழு ரவி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...