புதுவை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி,  செப். 21: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பாம்பன்  துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல்  புதுச்சேரி துறைமுகத்திலும் நேற்று காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.  ஏற்கனவே துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பிரச்னை காரணமாக அவர்கள் 10 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீக்காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

வில்லியனூர், செப். 21: வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அழகுதுரை(55). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கு சரசு என்ற மனைவியும், வேல்குமார், முத்தழகன் என்ற 2 மகன்களும் உள்ளன. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் பிரச்னை செய்வாராம். இந்நிலையில் நேற்று மதியம் அவர் புதிதாக கட்டியள்ள மாடி வீட்டில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இதுகுறித்து அவரது மனைவி சரசு மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்கு பதிந்து அழகுதுரை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: