×

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி, செப். 21:  புதுச்சேரி அரசு, தேசிய மனநலத்திட்டம் சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் நேற்று நடந்தது. தேசிய மனநலத்திட்ட அதிகாரி ஜவகர் கென்னடி தலைமை தாங்கி, தற்கொலை தடுப்பு தினம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து கருத்துரை வழங்கினார். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் அருள்வர்மன் கலந்து கொண்டு, `ஒருங்கிணைந்து செயல்படுவோம் தற்கொலையை தடுப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில் மருத்துவ அதிகாரிகள், நலவழித்துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அருள் விசாகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மனநல சமூக பணியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் முனசரிம, சுகாதார உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...