காலாப்பட்டு, செப். 21: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு இசிஆர் சாலையில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இங்கு புதுவையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகு அனுப்பப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை, தலைமை காவலர்கள் ஆறுமுகம், உதயகதிர் ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் உள்ளே அதிகமாக அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை வெளியே எடுத்தபோது, அதனுள் 82 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.