சின்னசேலம், செப். 21: கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமலை, மேல்சாத்தனூர், தாழ்சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரதமரின் குடியிருப்பு கட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளிமலை ஊராட்சியில் கோணக்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள ஓடைகளில் தடுப்பணை நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கல்வராயன்மலையில் வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீர் திட்ட பணிகளும் நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், திட்ட இயக்குநர் மகேந்திரன், செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் நித்யா ஆகியோர் மலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.