விழுப்புரம், செப். 21: தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முருகையன், பாக்கியராஜ், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூபாலன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இளவரசன் நன்றி கூறினார்.கூட்டத்துக்கு பின் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது.