மின்நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

விழுப்புரம், செப். 21: விழுப்புரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விழுப்புரம் மண்டலத்தின் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் விழுப்புரம் தலைமை பொறியாளர் சிவராஜ் தலைமையில் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடக்கிறது. நாளை (22ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் நடக்கும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் மின்வாரியத்துறை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் 22ம் தேதிக்குள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். மேலும் கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகள் இருந்தால் அதனை தெரிவித்து பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.

Related Stories: