×

டீசல் உயர்வை கண்டித்து போர்வெல் உரிமையாளர்கள் ஸ்டிரைக்

மணப்பாறை, செப்.19:  மணப்பாறை பகுதியில் டீசல் விலை உயர்வை கண்டித்து  போர்வெல்  உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மருங்காபுரி, விராலிமலை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட போர்வெல் லாரிகள் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக டீசல் விலையும் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.  இதனால் தாங்கள் செய்கின்ற தொழிலில் தினம் ஒரு தொகையை பொதுமக்களுக்கு கூறக்கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும், முன் பணம் கொடுத்தவர்களிடமும் கூட ஓரிரு நாட்களில் கூடுதல் தொகையை நிர்ணயம் செய்து கூறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது  என்று கூறி    கடந்த 4 நாட்களாக  மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போர்வெல் வேலைகள் அனைத்தும் நிறுத்தி போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு