முசிறியில் காஸ் நுகர்வோர் குறைதீர் முகாம்

தா.பேட்டை, செப்.19:  முசிறி தாலுகா அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்டி தலைமை வகித்தார். முசிறி தாசில்தார் சுப்ரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சந்திரதேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், சிலிண்டர்களுக்கு ரசீது தொகையை விட கூடுதலாக பணம் கேட்டால் புகார் தெரிவிக்கவும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச காஸ் இணைப்பு பெறும் முறை பற்றியும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் வனஜா மற்றும் காஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல்முருகன் வரவேற்றார். சிறப்பு வருவாய் ஆய்வாளர் மணி நன்றி கூறினார்.

Related Stories: