தா.பேட்டை, செப்.19: தா.பேட்டை அடுத்த என்.கருப்பம்பட்டி காவிரி மானிய தொடக்கப் பள்ளியில் பசுமையின் நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி சிவானி கல்வி குழுமங்கள் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கன், பாதாம், மகிழம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செங்கமலை, பசுமையின் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.