வாகன சோதனையில் ரூ.51 ஆயிரம் அபராதம் வசூல் 517 வழக்குகள் பதிவு

திருச்சி,செப்.19: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கன்டோன்மெண்ட், பொன்மலை, ரங்கம், கோட்டை ஆகிய போலீஸ் சரகங்களில் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான எஸ்.ஐக்கள் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.இதில் 150 இடங்களில் 2,165 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டதில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சோதனையில் மொத்தம் 517 வழ க்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.51,600 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது.

Related Stories: