திருச்சி,செப்.19: திருச்சியில் 2 வீடுகளில் 37 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்பநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி எடமலைப்பட்டி புதுார் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் ரித்தின்ஜெல்சன்(25). தனியார் தொண்டு நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்டெசி. புதுமண தம்பதிகளான இவர்கள், கடலுார் சென்று இருந்தனர்.நேற்று தம்பதியினர் திருச்சி திரும்பிய போது அங்கு வீட்டு முன்பக்க கதவு பூட்டு உடைக்கப் பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. எடமலைப்பட்டி புதுார் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.