மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பாபநாசம், செப். 19:  பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த மாத்தூர் மாதா  கோயில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளின் உபகாரசாமி (27). இவர் மாத்தூர்  மெயின் ரோடு சுரேஷ் வீட்டின் விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டினார்.  அப்போது வீட்டின் நீர்மூழ்கி மோட்டாருக்காக இணைத்திருந்த ஒயரில் கடப்பாரை  பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உபகாரசாமி பலியானார்.  இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை  நடத்தினர்.

Related Stories: