பாபநாசம், செப். 19: மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சாரதா சித்தி விநாயகர் அறக்கட்டளை சார்பில் பாபநாசம் அருகே மெலட்டூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் 300 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 29 பேருக்கு கண்ணில் புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஐஓஎல் லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க தஞ்சை ராஜா மிராசுதார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.