கும்பகோணம், செப். 19: குகும்பகோணம் பெசன்ட் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட பெருவணிக நிறுவனங்கள், 3 பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் அந்த ரோட்டில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். கடந்த மகாமகத்தின்போது பெசன்ட் ரோட்டின் நடுவில் 30 மின் கம்பங்களை நட்டு மின்விளக்கை பொருத்தினர். இதனால் தினம்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுபோன்ற நிலையால் சாலையின் நடுவில் மின் கம்பத்தை அகற்ற வேண்டுமென அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.