பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து வஉசி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப். 19:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு வஉசி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் சிங்காரவேலுபிள்ளை தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொது மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் விற்பனை வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநில செய்தி தொடர்பாளர் அசோக்குமார், மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், சுவாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், ராஜா மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு வஉசி மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

Related Stories: