கீழணை பகுதியில் பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது பொதுமக்கள் மனு

தஞ்சை, செப். 19:  கும்பகோணம் அருகே கீழணை பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.கும்பகோணம் அருகே கீழணையில் புதிய பாலம் கட்டப்படவுள்ளது. இதற்காக வேட்டமங்கலம், சரபோஜிராஜபுரம், முள்ளங்குடி மதகுசாலை கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராமவாசிகள் நேற்று தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் சரபோஜிராஜபுரம், வேட்டமங்கலம் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதாக தெரிகிறது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் பல ஏக்கர் நிலத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலத்தை கையகப்படுத்துவதால் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்தில் படித்த வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: