×

சாலை விபத்தில் வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

பொன்னமராவதி, செப்.19:    பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியை சேர்ந்த  முத்துபாண்டி(20). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஆனந்த்(21), கோபால்(20). இவர்கள் மூவரும்  நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து பைக்கில் கொன்னைப்பட்டிக்கு சென்றுள்ளனர். கொப்பனாபட்டி ஆரம்பசுகாதார நிலையம் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளி முன்பு உள்ள வேகத்தடையில் சென்றபோது பைக் நிலை தடுமாறி தூக்கி வீசியதில் அருகில் இருந்த விளம்பர போர்டில் விழுந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேரையும் பொன்னவராவதி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மேல்சிகிச்சைக்கான தஞ்சை  மருத்துவக்கல்லூரி மருத்துவனை மற்றும் மதுரை மருத்துவமனைக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த முத்துபாண்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனந்த மற்றும் கோபால் ஆகியோர் மதுரையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு