×

கரூர் மாவட்ட நீதித்துறையில் காலிப்பணியிடம் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் 29ல் நேர்காணல் முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்

கரூர், செப்.19: கரூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்து இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ள  தகுதியான நபர்கள் மட்டும் அனைத்து சான்றிதழ்களின் அசல், நகல்களுடன் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் வரும் 29ம் தேதி நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பத்திரிகை மற்றும் இணையதளம் வாயிலாக கோரப்பட்டதன் பேரில் வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டது.
 இதில் தகுதியான விண்ணப்பத்தாரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களுக்கும், மேலும், கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் வரும் 29ம்தேதி காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.

மேலும், குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் விபரங்கள் நீதிமன்ற இணையதளத்தில் (https://districts.ecourts.gov.in/karur) வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியான நபர்கள் மட்டும் அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு முதன்மை மாவட்ட நீதிபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது