×

ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் ராஜினாமா செய்யக்கோரி கரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

கரூர், செப்.19: ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் ராஜினாமா செய்யக்கோரி கரூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று கரூர் ஆர்எம்எஸ்   அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய, நகர,   பேரூர்,அணிகளின் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில்   கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர்   ராஜேந்திரன் தலைமை வகித்தார். சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர்   கே.சி.பழனிசாமி, மாநில நிர்வாகிகள் சின்னசாமி. மணிராஜ், குளித்தலை எம்எல்ஏ   ராமர், மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, ரமேஷ்பாபு, கருப்பண்ணண், மகேஸ்வரி,   ராஜேந்திரன், ஒன்றிய, நகர செயலாளர்கள் கந்தசாமி, ரகுநாதன், மணியன்,   கருணாநிதி, ரவிராஜா, உமாபதி, பிச்சை, சந்திரன். கனகராஜ், மாணிக்கம்,   கணேசன், சுப்பிரமணி, முன்னாள்எம்எல்ஏ காமராஜ், கரூர் முரளி, சுபராஜகோபால்,   காலனி செந்தில், மற்றும் பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு   உறுப்பினர்கள் உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.   ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால்   மக்கள்கூட்டம் நிறைந்துகாணப்பட்டது.

 மாவட்ட செயலாளர் நன்னியூர்   ராஜேந்திரன் பேசுகையில், 4முறை எம்பியாக இருந்தும் தம்பிதுரை தொகுதிக்கு   எதுவும் செய்யவில்லை. 7ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தும் அமைச்சராக இருந்த   செந்தில்பாலாஜியும், தற்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரும் வாக்குறுதிகளை   நிறைவேற்றவில்லை. புதிய பஸ்நிலையம், நகரும்படிக்கட்டு, பைபாஸ் சாலை,   அம்மாசாலை, மண்மங்கலம் உயர்மட்டப்பாலம், நகராட்சி குடிநீர் திட்டம்,   குகைவழிப்பாதைகள்என கொடுத்த வாக்குறுதிகள்ஒன்றையாவது நிறைவேற்றியதாக   கூறமுடியுமா? மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியும் கரூர் ஒன்றிய   பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை. கரூர் மாவட்ட கடைமடை பகுதிக்கே   தண்ணீர்போய்ச்சேரவில்லை. பூமிபூஜைபோடுவது, கமிஷன் வாங்குவதை தவிர எதுவும்   நடைபெறவில்லை. வாரம் ஒருமுறை வருவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, இதுதான்   எம்பியின் வாடிக்கை. துணை சபாநயகர் பதவியையும் வைத்துக்கொண்டு எதையும்   செய்யாதவர். 4முறை எம்பியாக இருந்தும் சேலம் அகலபாதையில் ரயில்விட   முடியவில்லை.  கே.சி.பழனிசாமி எம்பியாக இருந்தபோது லாலாப்பேட்டை,   வெங்கமேடுமேம்பாலம், சேலம் அகலப்பாதை, திருச்சி என்எச் சாலைவிரிவாக்கம்,   குடிநீர் திட்டம், என எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றினார், அதுபோல ஒரு   பெரிய திட்டத்தையாவது நிறைவேற்றினேன் என தம்பித்துரையால் கூறமுடியுமா?   என்றார்.

Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது