விபத்தில் இருவர் சாவு

ஆனைமலை, செப். 19: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள காடாம்பாறை மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாபு(35), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். வால்பாறை ரோடு சண்முகாபுரம் எனும் பகுதியில் வரும்போது, எதிரே வேகமாக வந்த கார் ஒன்று, பாபு பைக் மீது மோதியது.   இந்த விபத்தில் படுகாயமடைந்த பாபுவை, அப்பகுதியினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாபு இறந்தார்.  

 அதுபோல், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள வி.காளியாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து(70), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில், வேட்டைக்காரன்புதூரிலிருந்து ஒடையக்குளம் செல்லும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, காளிமுத்து மீது மோதி நிற்காமல் சென்றது.  இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே காளிமுத்து இறந்தார்.

Related Stories: