ஆனைமலை, செப். 19: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள காடாம்பாறை மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாபு(35), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். வால்பாறை ரோடு சண்முகாபுரம் எனும் பகுதியில் வரும்போது, எதிரே வேகமாக வந்த கார் ஒன்று, பாபு பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாபுவை, அப்பகுதியினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாபு இறந்தார்.