அதிமுக அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 19: அதிமுக அரசின் ஊழலை கண்டித்து திருப்பூர் வடக்கு திமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.  அதிமுக., ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்து வரும் ஊழல்கள் குறித்தும் பலர் பேசினர். எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதால் இந்த  ஆட்சியை துாக்கி எறிய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில்,   மாநகர செயலாளர் நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ., கோவிந்தசாமி,  மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜமோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  தங்கராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மேங்கோ  பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி உட்பட  பொறுப்பாளர்கள்,  தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், பேரூர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், எம்எல்ஏ.,க்கள் சரஸ்வதி, பிரபாவதி, இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞரணி செல்வராஜ், மாநில மகளிர் பிரசார குழு சத்தியா பழனிகுமார் உள்பட எராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: