அவிநாசி, செப். 19: திருப்பூர் அருகே பனியன் நிறுவன அதிகாரி வீட்டில் காரை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் அருகே சொர்ணபுரி ரிச்லேண்டு பகுதியில் வசிப்பவர் கவுசர் (42). பனியன் நிறுவன அதிகாரி. இவர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். நேற்று முன்தினம் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் வாசலின் நிறுத்திவைத்திருந்த விலை உயர்ந்த இவரது காரை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அங்குள்ள பனியன் நிறுவன சிசிவிடி காமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.