தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர் கைது

தாராபுரம், செப். 19: தாராபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தியது  தொடர்பாக செங்கல் சூளை அதிபர் மகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

 பெரியார் பிறந்த தினமான நேற்று முன்தினம் தாராபுரத்தில்  உள்ள பெரியார் சிலையை அவமரியாதை செய்தனர். சிலையின் தலைபகுதி சேதப்படுத்தப்பட்டிருந்தது.  இதுகுறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை  நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்,  தாராபுரம் அடுத்த பாப்பையன் புதூரில் உள்ள செங்கல் சூளை அதிபர் கந்தசாமியின் மகன் நவீன்குமார் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், கடந்த 16ம் தேதி இரவு நவீன்குமார் தனது செங்கல் சூளையில் இருந்து செங்கல் எடுத்துக் கொண்டு வந்த அவர், காலணிகளையும், செங்கல்லையும் பெரியார் சிலை மீது வைத்துவிட்டு தனது செல்போனில் போட்டோ எடுத்து தப்பியது  தெரியவந்தது.

Related Stories: